Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜராஜன் சோழன் ஜீவ சமாதியில் சதய நட்சத்திரத்தில் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

ஆகஸ்டு 18, 2019 09:01

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடத்தில் சதய நட்சத்திரத்தில் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் கூட்டுப்பிரார்த்தனை திருமுறைப்பாராயணம் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் இராம.இரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மலேசியாவில் இருந்து திருச்செல்வம் அவரது குடும்பம் அவரது நண்பர் குடும்பமும் கலந்து கொண்டனர்.  பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தபோது தஞ்சையில் பெரிய கோவிலில் சாமி தரிசனம் கூகுள் மேப்பில் நினைவிடத்தில் வந்து பார்த்த போது மிகவும் சந்தோசமாக இருந்தது.

ஆனால் நினைவிடம் மிகவும் சின்னதாக உள்ளது தமிழக அரசு மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு இந்த இடத்தில் பெரிய கோயில் ஒன்றைக் கட்ட வேண்டும்  ராஜராஜ சோழனுக்கு சென்னையிலும் உடையாளூர்லும் மணிமண்டபமும் கட்ட வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் சன். சிவா மற்றும் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்